ஜெயலலிதா கை காட்டும் நபரை சாமியாகவும் அவர் எதிர்ப்போரை சாணியாகவும் தங்களுக்கு மிதிக்க தெரியும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரை தெற்குமாசி வீதியில் அதிமுக சார்பில் ஜெயலலிதா 70 ஆவது பிறந்த நாள் விழா நடைபெற்றது. அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்ட விழா மேடையில் பைனான்சியர் அன்புச்செழியனும் அமர்ந்திருந்தார். இந்த விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், இந்தியா முழுவதும் மோடி அலை வீசியபோது தமிழகத்தில் மட்டும்தான் லேடி அலை வீசியது. ஜெயலலிதா பிரதமராக வர வேண்டும் என தமிழக மக்கள் விரும்பினர்.
Minister Sellur Raju says that they know how to behave the one who indicated by Jayalalitha and one who opposes by her.