கடற்கரையில் கைபற்றப்பட்ட வெடிகுண்டுகள் விடுதலைபுலிகள் அமைப்பினர்களுக்கு சொந்த்மானதா என்று அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்
தங்கச்சி மடம் அந்தோணியார்புரம் கடற்கரையில் வைக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட வெடிகுண்டு பொருட்களை திருவாடனை மாவட்ட உரிமையியல் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பாலமுருகன் அவர்கள் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்வையிட்டார். அங்கிருந்து கிளம்பி ராமநாதபுரத்தில் ஆயுதப்படை மைதானத்தில் இருக்கும் 10828 தோட்டாக்களையும் ஆய்வு செய்ய உள்ளார்.இந்த ஆய்வில் நீதிபதி வெடிகுண்டுகளை சரி பார்த்த உடன் ஓரிரு நாட்களில் நீதிபதி வெடிகுண்டு செயல் இழப்பது சம்மந்தமாக அறிக்கை வெளியிட்ட உடன் காவல்துறையினர் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்று வெடி பொருட்களில் உள்ள மருந்துகளை அனைத்தையும் அகற்றி மொத்தமாக வைத்து எரித்து விடுவார்கள்.மேலும் அந்தோணியார்புரம் கடற்கரையில்எடிசன் என்பவர் வீட்டில் எடுக்கப்பட்ட வெடி பொருட்கள் கடந்த 1983 முதல் 1983 வரை விடுதலைபுலிகள் அமைப்பினர்கள் இந்த இடத்தில் பயிற்ச்சி பெற்ற இடமாகாவும் ஆயுதகிடங்காகவும் இருந்த்தால் அது தொடர்பாகவும் அதிகாரிகள் விசாரனை நடத்த உள்ளனர்