தமிழ்நாடு ஸ்கிப்பிங் அசோசியேசன் சார்பில், மாநில அளவிலான ஸ்கிப்பிங் போட்டி சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் 8 மாவட்டங்களில் இருந்து, 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இதுகுறித்து, தமிழ்நாடு ஸ்கிப்பிங் அசோசியேசன் பொது செயலாளர் மான் பிரசாத் கூறும்போது, இந்த போட்டியானது தனிநபர் போட்டி, இருவர் போட்டி, குழு போட்டி என மூன்று பிரிவுகளில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவ மாணவியர்கள், அடுத்தமாதம் ஜம்மு-காஷ்மீரில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் பங்குபெறும் தகுதியைப் பெறுவார்கள். ஸ்கிப்பிங் விளையாட்டு தற்போது பல்கலைக்கழக விளையாட்டு பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்விளையாட்டு வீரர்கள் கல்லூரி சேர்க்கையின் போது, ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் சேரலாம், இவ்வாறு அவர் கூறினார்
Des: On behalf of the Tamil Nadu Skipping Association, state level skipping competition held at Salem Gandhi Stadium