Random Video

அஜீத் முதல் முறையாக மதுரை ஸ்டைலில் பேசிருக்கார்.. இயக்குநர் சிவா.. விஸ்வாசம்

2019-01-10 0 Dailymotion

ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்தை திரையில் பார்க்கப்போகிறோம். அதுவே ரசிகர்களுக்குப் பெரிய திரு விழாதான். கொடுவிலார்பட்டி என்ற கிராமத்து மண்ணின் மைந்தர்களைப் பற்றிய கதை. கிராமத்தில் தொடங்கி நகரம் வரை தொடர்கிற கதை. உண்மையும், பாசமும், நேசமும், எகத்தாளமும் கொண்ட மக்கள் வாழும் பின்னணியில் கதை நடப்பதால், திரைக்கதை எழுதும்போதே திருவிழா தோரணை வந்துவிட்டது. எடுக்கும்போது அது இன்னும் அதிகமாகிவிட்டது. படம் முழுக்க திருவிழா களையைக் கொண்டுவர கலை இயக்குநரின் பங்களிப்பு முக்கிய காரணம்.