எம்.ஜி.ஆர் இளைஞரணி முன்னாள் நிர்வாகி ஏ.ஆர்.பழனி என்பவர் மதுசூதனன் மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார். அதில், 1995-ல் மதுசூதனன் அமைச்சராக இருந்தபோது போலி ஆவணங்கள் தயாரித்து நிலமோசடி செய்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்திடம் நிலமோசடி தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும், கே.கே.நகர் வீட்டுவசதி வாரிய நிலத்தை தமது மனைவி ஜீவா பெயரில் மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளார்.