தஞ்சாவூர் பெரிய கோயிலில் நேற்று இரவு 11 மணி வரை சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் கோயிலில் இருக்கும் புராதன சிலைகள் ஒரிஜினலாக உள்ளதா ஆரம்பத்தில் இருந்ததுபோல் எடை சரியான அளவில் அப்படியே இருக்கிறதா என மிகவும் ரகசியமாக ஆய்வு நடத்தினர். அப்போது பல கேள்விகளுக்கு கோயில் தரப்பில் பதில் சொல்ல முடியாமல் தவித்ததாகச் சொல்லப்படுகிறது.