Random Video

தடுப்பூசி முகாமில் புகுந்த பாம்பு; அலறி அடித்து ஓடிய மக்கள்!

2022-06-09 4 Dailymotion

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மூலங்குடி கிராமத்திலுள்ள அரசு ஆரம்ப பள்ளியில் இன்று சிறியவர்களுக்கு நோய்த்தடுப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது அப்போது முகாமின் அருகாமையிலுள்ள சமையலறையில் சுமார் 9 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு உள்ளே புகுந்துள்ளது இதனால் அப்பகுதியில் உள்ளவர்கள் அலறியடித்து ஓடி உள்ளனர் மேலும் நன்னிலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு ஒன்பது அடி நீளமுள்ள சாரை பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது