முதலமைச்சரும் நிதி தரவேண்டுமென வலியுறுத்திருக்கிறார். இனிமேல் ஒன்றிய அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை வழங்கும் என்று நம்புவதாகவும் கூறினார். பெரியார் இல்லையென்றால் அதிகளவு விவசாயிகள் இருந்திருப்பார் என செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த விசிக தலைவர் திருமாவளவன் பெரியார் பற்றி தொடர்ந்து குதர்க்கமாக பேசி வருவதாகவும், இது தேவையற்ற சர்ச்சை தமிழ்நாடு அரசியலை வேறொரு திசையைநோக்கி மடைமாற்றம் செய்ய விரும்புகிறார். அது தமிழகத்திற்கு நல்லது இல்லை என சுட்டி காட்ட விரும்புவதாக தெரிவித்தார்.